Monday, March 7, 2011

ராமச்சந்திரனுக்கு ஒரு இச்


கன்னட பிரபலமான ஸ்ரீமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் "சென்ன பசவ நாயக்கன்" நாவலை, தமிழில் மொழி பெயர்த்தவர் திரு. ஹேமா ஆனந்த தீர்த்தன்.

ஓரளவு தமிழ் வாசிக்கத் தெரிந்தவரான ஐயங்கார்,  மொழி பெயர்ப்பின் கையெழுத்து பிரதியை வாங்கிப் பார்த்துவிட்டுக் கேட்டாராம்.

"என்ன ராமசந்திர மூர்த்தியைப் பற்றி எழுதும் போது, நடுவில் ஒரு இச் சேர்த்து ராமச்சந்திர மூர்த்தி என எழுதுகிறீர்கள். அது தவறல்லவா..?" என்று கேட்டிருக்கிறார்.

"தமிழில் எல்லோரும் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுதான் வழக்கம்..!" என்று ஹேமா ஆனந்த தீர்த்தன் சொல்லிவிட, அய்யங்கார் அரை மனதுடன் ஒத்துக்கொண்டாராம்.

பிறகு, ஹேமா ஆனந்த தீர்த்தன் பல பத்திரிக்கைகளையும் கவனித்த போது தான் தெரிந்தது.

அத்தனை பத்திரிக்கைகளிலும், எல்லோர் எழுதிய இடத்திலும் "ராமச்சந்திரன்" என்றே இருந்தது.

என்றாலும், ராஜாஜி அவர்கள் எழுதிய எல்லா நூல்களிலும், எல்லா இடங்களிலும் "ராமச்சந்திரன்"-ஐ  இச் இல்லாமல், "ராமசந்திரன்" என்றே எழுதியிருந்தாராம்.
.
.
.