Showing posts with label மராட்டிய மன்னர். Show all posts
Showing posts with label மராட்டிய மன்னர். Show all posts

Monday, February 21, 2011

சிவாஜி தலையிலே..


ஒரே வருடத்தில், இரண்டு முறை முடிசூடினார் மராட்டிய மன்னர் சிவாஜி.

காரணம் என்ன தெரியுமா..?

பிரபல சரித்திர அறிஞரான மகாமகோபாத்யாய போத்தரர் இது பற்றிக் குறிப்பெழுதி இருக்கிறார்.

மாமன்னர் சிவாஜி முதன்முதலில் மகுடம் சூடியது 1794ம் வருடம் 6ம் மாதம் 6ம் தேதி.

அந்த 8ம் தேதி, அவருடைய மனதுக்குகந்த தளபதியான பிரதாப்ராவ் குஜ்ஜார் மரணம் அடைந்தார்.

அதே 11ம் தேதி, அவருடைய மனைவி கேஷாபாய் காலமானார்.

அடுத்த 19ம் தேதி, மாமன்னர் சிவாஜியின் வீரத்தாய் ஜீஜாபாயும் இறைவனடி சேர்ந்தார்.

நிஸ்சல் பூரி என்னும் ஓர் அறிஞர் ஜாதகம் எல்லாம் கணித்துவிட்டு, "சிவாஜி பட்டம் சூட்டிய நாள் சரியில்லை..!' என்று காரணம் கூறி, வேறொரு நல்ல நாளில் மறுமுடி தரிக்கச் சொல்ல.....

எண்பது நாட்கள் கழித்து...

 இன்னொரு நன்னாளில், இரண்டாம் தடவையாக மீண்டும் முடிசூடிக் கொண்டாராம் மாமன்னர் சிவாஜி.
.
.
.