Friday, February 25, 2011

ஹிட்லரின் கருணை

ஜெர்மனி ஹிட்லர் ஆட்சியில் இருந்தபோது நடந்தது இது.

ஹிட்லரைக் கொல்ல சதி செய்ததாகச் சொல்லி, எதிர்ப்பாளர்கள் பலரையும் கைது செய்து சிறையில் தள்ளிக் கொண்டிருந்தார் ஹிட்லர்.

அவர்களில் ஒரு பகுதியினரை சித்திரவதை செய்து கொல்லவும், மற்றவர்களை சுட்டுக் கொல்லவும் உத்தரவிட்டார் ஹிட்லர்.

சுட்டுக் கொல்லப்பட வேண்டிய லிஸ்டில் ஒருவராய் இருந்தவர் ஜெனரல் ரோமல்.

ஹிட்லரின் ஆரம்ப காலங்களில் ஹிட்லரோடு சேர்ந்து போராடியவர் அவர்.
எனவே, அவரை நேரில் கண்டபோது ஹிட்லர் சொன்னார்.

"நான் ஜெனரல் ரோமலுக்கு கருணை காட்டலாம் என்று நினைக்கிறேன்..!".

ஹிட்லர் சொன்னதும் அருகில் இருந்த ஒருவர் கேட்டார்.

"அப்படியானால், இவரை விடுதலை செய்து விடலாமா..?".

கேட்டவரை திரும்பிப் பார்த்த ஹிட்லர் சொன்னார்.

"அவரை சுட்டுத்தள்ள வேண்டாம்... தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்..!".
.
.
.

2 comments:

  1. இதுக்குப் பேருதான் கருனைங்களா அண்ணா ? ஹி ஹி

    ReplyDelete
  2. ஏகாதிபத்ய கருணை..........

    ReplyDelete